Saturday, March 16, 2024

What happened to Krishna's descendants after destruction of Dwarka (my talk in Satyameva Jayate)

Part -2: What happened to the survivors of the Dwaraka- flood after the Vrishnis killed each other? The brief account of it given in the Epilogue of my book 'Mahabharata 3136 BCE' is narrated with additional inputs in the 2nd part of the Dwaraka series released by #SatyamevaJayate

hashtaSatyamevaJayate.The video begins with a description of the route taken by Arjuna leading the survivors of the flood to safe regions, as given in the MB. Satyaki-clan was settled on the banks of Saraswati and Kritavarman-s in Mehgrah. The Sindhu region was with the descendants of Jayadratha. I go on to show how the date matches with Early Harappan. The settlements along the Saraswati appear only during the Early Harappan coinciding with MB description of settling Dwaraka survivors in the same region. By 1300 BCE settlers dispersed. Development of Bet Dwaraka coincided with it.

A group of the later-day descendants of Dwaraka survivors (Satyaki- clan) moved from the Saraswati region to TN. They must have set up the Parthasarathy temple in Triplicane because that is the only temple having Satyaki in the Garbhagriha. The Utsva murti was made and worshiped by Vyasa as per the Sthala purana.
That the Harappan was peopled with the post- Mahabharata people is reinforced by the fact that all the top animal symbols in Harappan seals were the emblems of the losers of the MB war. Horse symbol is missing in the Harappan seals because no king of Bharat of those days had horse as his insignia. I also show how the Varaha symbol of the Harappan was seen among various dynasties including the Vijayanagara kings, bull by Pallavas who descended from Aswatthama and Nakula's Sarabha is seen in Gandaberunda of Mysore kings (now state symbol of Karnataka), but also found in Mesopotamia and beyond.

2 migrations of Krishna clan: 1st from Mathura to Dwaraka and then to Harappan after Krishna left in 3101 BCE. 2nd to Bet Dwaraka and S. India at the decline of the Harappan around 1500 BCE. Almost all the excavations in TN are of these migrants. Eg: Vajra in Porunthal potsherd is the name of Krishna's great grandson. The migrants were 18 kings related to Krishna, 18 sections of Velirs & Aruvalar as per Tamil sources. Their presence seen from Maharashtra to down south in 3 States. Till 1000 years ago they remembered their origins. Today merged with others. For details watch





Friday, March 15, 2024

Where was Krishna's Dwaraka (My talk in Satyameva Jayate clubhouse)

 Part 1 of my talk on the location of Krishna's Dwaraka. 

At first, I am discussing the feasibility of Bet Dwaraka in the Kutch region and the marine excavations in the Cambay region for being Krishna's Dwaraka. They don't match with Krishna's date of leaving the world in 3101 BCE. 

Then I start finding its location from the details given in Harivamsa. Dwaraka was an island off the coast of Prabhas, i.e., Somnath. The nimitta-s noticed before the Dwaraka flood are discussed to know the nature of the calamity that befell on Dwaraka. 

The last moments of the Vrishni-s and the nature of 'grass' that was used to kill each other are also analysed. The causes for the sinking of Dwaraka are traced to the submarine slide called 'Nataraja slide' happening for ages in that region. The prospects of locating the lost Dwaraka also discussed. There was a question - answer session at the end.



Wednesday, March 13, 2024

List of my books published so far..

Here is the list of my books published so far. 

1. Mahabharata 3136 BCE (English)-  https://jayasreesaranathan.blogspot.com/2021/11/published-my-new-book-mahabharata-3136.html (Rs. 450)


3. Ramanuja Itihasa (Tamil) - Rs. 380

4. Myth of the Epoch of Arundhati of Nilesh Nilkanth Oak (English) - https://jayasreesaranathan.blogspot.com/2021/12/myth-of-epoch-of-arundhati-of-nilesh.html (Rs.200)

5. When was the First Vedic Homa done? (English) - https://jayasreesaranathan.blogspot.com/2021/12/my-book-when-was-first-vedic-homa-done.html (Rs. 40)

6. When was the First Vedic Homa done? (Tamil) - Rs. 50

7. Oral Cancer: Astrological Prediction and Remedies  (English) - https://jayasreesaranathan.blogspot.com/2021/08/paper-back-edition-of-my-book-oral.html (Rs. 230)

8. ஆண்டாள் தமிழும் அறியாத வைரமுத்துவும் (Tamil) - https://jayasreesaranathan.blogspot.com/2019/09/my-book-critiquing-vairamuthus-article.html (Rs. 50) 

9. Who Killed Aditya Karikala? The Historical facts of Ponniyin Selvan (English) - Rs. 140

10. Who Killed Aditya Karikala? (Tamil)-  https://jayasreesaranathan.blogspot.com/2023/07/print-version-of-my-book.html - Rs, 175

11. Date of Adi Shankara 148 BCE (English) - Rs. 75

12. Epoch of Arundhati: A critique (eBook) 

Those willing to buy these books can drop a mail to me jayasreebooks@gmail.com

The books are distributed within India only.
The shipping cost depends on the weight of the books selected and it will be nominal. 
I will inform you of the shipping cost after you select the books.
The books will be sent as Registered Parcel through India Post.

The amount can be paid through Gpay or Phonepe or PayTm to the number provided by email.

Mahabharata and Ramanuja Itihasa (English) can be purchased from Hindu eshop too. 

I am looking for book stores to sell my books throughout India.
Any help and suggestions in this regard are welcome by contacting me through email given above. 



Publications by Jayasree Saranathan





Is it necessary to celebrate Women's Day? (My talk in Twitter Spaces)

Should we in India need a special day for women, namely, the International Women's day

This question might sound provocative, particularly after I received a citation honouring me on the Women's Day. I am very much agreeable to honoring the hard work and contribution of any one - irrespective of being a woman or man. But thinking of the underlying concept of the International Women's Day, I have certain reservations.

The International Women's Day was adopted by the UN sometime in the 80s with specific goals such as gender equality, reproductive rights and to stop violence and abuse against women. While I am in complete agreement with the last two, the idea of gender equality is misleading. Man and woman are unique in their own ways and cannot be made equal to each other. By gender equality, the woman is made to do works that men do, in addition to the works that she alone can do as a woman. The woman is brainwashed to think that she can be a Super Woman and a Super Mom which in reality increases the burden on her. 

The Women's day was conceived in the western society where women were not treated well. They lacked the voting right even in places like Switzerland until 1971. In India, women were worshiped as Goddesses for any kind of prosperity. Moreover, if we monetise the work they do as mothers and home-makers, that runs into trillions of dollars. They are responsible for creating the future generations of the country. 

With such thoughts in my mind I suggested a title, 'Should we need to celebrate the Women's Day?' when I was invited to be the guest speaker in Twitter Spaces on the evening of 10th March, 2024. 

Many women and men joined the discussion. Smt. Uma Anandan, the BJP councilor of T. Nagar constituency also joined towards the end of the discussion. Interestingly,  none voiced against this view given by me. All those who participated talked along with the same lines as mine. The recorded version of the session can be accessed here: 

https://twitter.com/i/spaces/1PlKQDkVONkxE?s=20


Related article:

Housewives worth a trillion dollars - by Prof. R. Vaidhyanathan

Saturday, March 9, 2024

ஆழ்வார்கள் வாக்கில் செங்கோல்

பரம காருணிகனான ஸர்வேச்வரன், மாந்தர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற பல விஷயங்களையும் அறிவிக்க சாஸ்திரங்களை ஸ்ருஷ்டித்து, அவற்றின்படி நடக்க வேண்டும் என்ற ஆஜ்ஞையையும் பிறப்பித்துள்ளான். அந்த ஆஜ்ஞையின் உருவகமே செங்கோல்!

செங்கோல் குறித்து பலவிதமாகக் கேள்விப்படும் இந்தக் காலக்கட்டத்தில், அதிலும், மன்னர்தம் கையில் மாண்புடன் இருக்கும் செங்கோல், மக்களாட்சிக்கு எதற்கு என்றும் மக்கள் கேட்கும் இந்த நேரத்தில் நாம் நினைவு கூர்வது நீள்மதிள் அரங்கத்தாமானின் கையில் இருக்கும் நீண்ட செங்கோல்தான்.

ஆள்பவன் எவனோ அவன் தண்டதாரியாக இருக்க வேண்டும் என்று பீஷ்மர், பாண்டவர்களிடம் சொல்வார். பிரபஞ்சத்தையே ஆளும் பகவான் கையில் செங்கோல் இருப்பது மிகவும் பொருத்தமானது. அதையே தர்ம-தண்டம் என்று பீஷ்மர் பலவிதமாக விவரித்துள்ளார். திருவள்ளுவனாரும் அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நிற்பது மன்னவன் செங்கோல் என்கிறார். எனில் அமரருக்கும் மன்னனான ஆதிபிரான் ஏந்தியிருக்கும் செங்கோலின் பெருமையை என்னென்று சொல்வது? அப்படிப்பட்ட செங்கோலைப் பற்றி ஆழ்வார்கள் எங்கேனும் சொல்லியிருக்கிறார்களா என்ற ஆர்வம் எழுவது இயற்கைதான். அவ்வாறு தேடும் போது, பன்னிரண்டு இடங்களில் செங்கோல் பற்றின விவரம் கிடைக்கிறது.

ஆண்டாள் கண்ட செங்கோல்

திருவரங்கத்துச் செல்வன் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஆண்டாள் நாச்சியார், அவன் கையில் சங்கு, சக்கரம் ஆகியவற்றுடன் செங்கோலும் இருக்கிறது. அவற்றுடன் பிரிவாற்றாமையால் கழன்ற தனது கை வளையும் அல்லவோ இருக்கிறது என்று அரற்றும் போது,

செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார்

எம்கோல் வளையால் இடை தீர்வர் ஆகாதே?” (நாச்-திரு: 11-3)

என்கிறாள். தன் வளையல் கழலும் அளவுக்கு பிரிவாற்றாமை என்னும் நோயைக் கண்ணன் கொடுத்தால், அவன் செங்கோல் சிறந்தது என்று சொல்லவா முடியும்? இதையே நம்மாழ்வார், திருவிருத்தத்தில் 25 -ஆவது பாசுரத்தில்,

“எம் கோல் வளை முதலா கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும்

செங்கோல் வளைவு விளைவிக்குமால்”

என்கிறார். தலைவியின் துயரத்தைப் பற்றிப் பேசும் இடத்தில், நியாயம் தவறாமல் இருக்க வேண்டிய செங்கோல், பகவானின் திருத்துழாயின் தண்மையை எதிர் நோக்கியிருந்த தலைவிக்குக் குளிர் காற்றுக்குப் பதிலாக உஷ்ணக் காற்றடித்து, தலைவியைக் கண்ணீர் விடச் செய்தது. அதனால் அவளது நிறமே மாறி விட்டது என்கிறார். இதைச் சொல்லும் போது, செங்கோலை நினைவுபடுத்துகிறார் நம்மாழ்வார்.

“பனிப்பு இயல்வாக உடைய தண் வாடை இக்காலம் இவ் ஊர்ப்

பனிப்பு இயல்பு எல்லாம் தவிர்ந்து எரி விசும் அம் தண்ணம் துழாய்ப்

பனிப்புயல் சோரும் தடங்கண்ணி மாமைத் திறத்துக்கொலாம்

பனிப்புயல் வண்ணன் செங்கோல் ஒருநான்று தடாவியதே” (திருவிருத்தம்: 5)

பக்தைக்கு அருள் பாலிக்காமல் நோகடித்த பனிப்புயல் வண்ணனான மேக வர்ணக் கண்ணனது செங்கோல் வளைந்தது. தவறிழத்தவர்களைத் தண்டிக்கும் போது செங்கோல் நிமிர்கிறது. ஆனால் அன்பனாய்த் தன்னை அடைந்தவரை அரவணைக்காதபோது அவன் செங்கோல் வளைகிறது. ஆனால் அப்படி அவன் வளையவிட மாட்டான் என்பதுதான் இங்கு உள்ளிடைப் பொருளாகக் காட்டுவது. என்றுமே அவன் செங்கோல் வளையாதது.

இந்த மூன்று இடங்களைத் தவிர பிற இடங்களில், மன்னர்தம் செங்கோலாகவும், வேறுவிதமாகவும் அருளிச் செயல் காட்டுகிறது.

 

செங்கோலும், மன்னர் நீதியும்

நான்காவதாக நாம் காட்டும் செங்கோல், பரமேஸ்வர விண்ணகரம் பணிந்த, பல்லவர் கோன் ஏந்தின செங்கோலாகும்.

வெண் குடை நீழல் செங்கோல் நடப்ப

      விடை வெல் கொடி வேல்-படை முன் உயர்த்த

பண்பு உடைப் பல்லவர்-கோன் பணிந்த

      பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே   

(பெரிய திருமொழி: 2-9-6)

செங்கோல் ஏந்தினாலும், மண்ணுலகாளும் மன்னன், பரமேஸ்வரன் முன் பணிவான்.  

ஐந்தாவதாக நாம் பார்க்க இருப்பது, கண்ணன் தூது சென்றபோது துரியோதனாதியர் செங்கோலோச்சி வீற்றிருந்த  தகைமையைத் திருமங்கையாழ்வார் சொன்ன பாங்கு.

போது ஆர் தாமரையாள் புலவி குல வானவர்-தம்

கோதா கோது இல் செங்கோல் குடை மன்னர் இடை நடந்த

தூதா தூ மொழியாய் சுடர்போல் என் மனத்து இருந்த

வேதா நின் அடைந்தேன்-திருவிண்ணகர் மேயவனே

(பெரிய திருமொழி: 6-2-9)

குற்றமில்லாத செங்கோலுடைய மன்னர் என்று துரியோதனாதியரைச் சொன்னது, கண்ணனது தூதுச் செய்திக்கு நியாயமான பதில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில்தான்.

ஆறாவதாக நாம் பார்க்க இருப்பதும் செங்கோல் ஏந்திய அரசன் ஒருவன், இறைவன் தாள் பணிந்தான் என்பதே.

செங்கோல் வலவன் தாள் பணிந்து ஏத்தித் திகழும் ஊர்-

நம் கோன் நறையூர்-நாம் தொழுதும் எழு நெஞ்சமே

(பெரிய திருமொழி: 6-4-3)   

நீதி வழுவா அரசனும், எல்லோருக்கும் நீதிமானான ஸர்வேஸ்வரனைப் பணிவன் என்பதைக் காட்டும் வண்ணம், செங்கோல் தரித்தமை காட்டப்பட்டுள்ளது.

இனி நாம் காட்டும் விவரங்கள் எல்லாம் திருவிருத்தத்தில் காணப்படுவன.

 

திருவிருத்தத்தில் செங்கோல்

‘தடாவிய அம்பும்’ எனத்தொடங்கும் 6-ஆவது பாசுரத்தில், ‘மதன செங்கோல் என்று சொல்லப்பட்டுள்ளது. மதன செங்கோல் என்றால் காமதேவனாகிய மன்மதனுடைய ஆஜ்ஞை என்று அர்த்தம். செங்கோல் என்பது ஆஜ்ஞையைக் காட்டுவது என்றே உரையாசிரியர்கள் கூறியுள்ளார்கள்.

யார் ஆஜ்ஞை செய்கிறார்களோ அவர்கள் செங்கோல் ஆள்வதாகக் கொள்ளவேண்டும் என்பதைத் திருவிருத்தம் 13-ஆவது பாடலில் காண்கிறோம்.

“தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாய் அரசு அவிய

பனி வளர் செங்கோல் இருள் வீற்றிருந்து பார் முழுதும்

வெப்பத்தைப் பரப்பும் சூரியன் பகலில் செங்கோல் ஓச்சுகிறான். குளுமையைப் பரப்பும் இருள் இரவில் செங்கோல் ஓச்சுகிறான்.

திருவிருத்தம் 33- ஆவது பாசுரத்தில் சுவாரசியமான ஒரு விவரம் வருகிறது. அருள் தரும் திருச் சக்கரத்தால் ஆகாயத்தையும், பூமியையும், அந்தகாரமான அஜ்ஞானம் என்னும் இருளையும், பாவங்களையும் கெடச் செய்யும் செங்கோல் எங்கிறார் ஆழ்வார்.

அருள் ஆர் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும்

இருள் ஆர் வினை கெட செங்கோல் நடாவுதிர்

சக்கரத்தையும் செங்கோலையும் சேர்த்துச் சொல்லவே, செங்கோலின் அமைப்பில் சக்கரம் இடம்பெற்றிருக்குமோ என்னும் எண்ணம் வருகிறது. இறைவனது ஆணையின் வெளிப்பாடாகத் திகழும் செங்கோலில், அவனது ஆணையைச் செய்யும் திருச் சக்கரம் உச்சியில் வீற்றிருப்பது பொருத்தமே.

திருவிருத்தப்பா 77-இல் செங்கோல் என்ற சொல் சூரியனது ஆஜ்ஞை என்ற பொருளில் வருகிறது.

திங்கள் அம் பிள்ளை புலம்ப தன் செங்கோல் அரசு பட்ட

செங் களம் பற்றி நின்று

திங்கள் என்னும் சந்திரன் புலம்பும் வண்ணம் சூரியன் தன் செங்கோல் ஓச்சினது என்று இந்தப் பாசுரம் கூறுகிறது.

அடுத்து 80-ஆவது பாசுரத்தில், செங்கோல் கொண்டு அரசாளும் மன்னர் சிலகாலம் கழித்து மறைவர், சூரியன் மறைவது போல என்கிறார் நம்மாழ்வார்.

“சீர் அரசு ஆண்டு தன் செங்கோல் சில நாள் செலீஇக் கழிந்த

பார் அரசு ஒத்து மறைந்தது நாயிறு

என்றுமே அழியாத செங்கோல் பகவானது செங்கோல்தான்.

அந்த எண்ணம்தான் மன்னராட்சியிலும், மக்களாட்சியிலும் ஓங்கி இருக்க வேண்டும். சூரியன் மறைந்து, தோன்றுவதைப் போல, மக்களை ஆள்பவர்களும், மறைந்தும், மாறிக் கொண்டும் இருப்பர். ஆனால் மாறாமல் இருப்பது சர்வேஸ்வரனுடைய செங்கோல். எங்கு, யாருக்கு, எதை, எப்படித் தருவது என்பது அவனது செங்கோலுக்கு மட்டுமே தெரியும். 25-ஆவது திருவிருத்தப்பாவில் சொல்வது போல குளுமையைத் தராமல் உஷ்ணத்தைத் தந்தாலும், எதற்கு நாம் தகுதியோ அதைத்தான் பகவான் தருவான் என்பதை ஆழ்வார் நமக்குக் காட்டுகிறார்.

 

வ்ருஷபம் என்னும் தர்ம தேவதை

அந்தச் செங்கோல் சக்கராயுதம் போல நீதி தவறாதது. அது ஒரு வ்ருஷபத்தைக் கொண்டிருக்கலாமோ என்று கேட்பின், பாகவத புராணத்தில் பரீக்ஷித் மஹாராஜா தர்ம தேவதையின் உருவில் இருந்த வ்ருஷபத்துடன் உரையாடினதை நினைவிற்குக் கொண்டு வருவோம். தர்ம தேவதை வ்ருஷபத்தின் உருவில் நான்கு கால்களில் நிற்கக்கூடியது. ஆனால் கலி யுகத்தில் மூன்று கால்கள் அடிபட்டுப் போய்விட்டன. அடிபட்டு விழுந்த வ்ருஷபம் எழுந்து நிற்க பரீக்ஷித் தர்மத்தை நிலைநாட்டினான். அதைத்தான் எக்காலத்திலும் ஆள்வோரும், மக்களும் கடைபிடிக்க வேண்டும். அதுவே தெய்வத்தின் ஆஜ்ஞை என்பதே செங்கோல் பற்றி ஆழ்வார்கள் காட்டும் கருத்தாகும்.

 

இராமாயண காலத்தை அறுதியிடும் தொல்லியல் சான்று

 My article in Geethacharyan in January, 2024 issue

பக்தர்கள் அனைவரும் வணங்குவதற்கு வழி செய்யும் விதமாக, ஸாகேதபுரி எனப்படும் அயோத்தி மாநகரில் ஸ்ரீராமசந்த்ர பிரபுவின் ஜன்மஸ்தானத்தில் கோயில் அமைக்கப்படும் இந்தத் தருணத்தில், அங்குதான் இராமர் பிறந்தார் என்று உறுதியாகச் சொல்வதற்கு ஏதுவாகத் தொல்லியல் சான்றுகள் இல்லை என்பதுதான் உண்மை என்பது சற்று உறுத்தலாக இருக்கிறது. ஆழ்வார்கள் மங்களாசஸனம் செய்வித்த இராமர் இருந்த இடமா அது என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை; ஏனெனில் அயோத்தி முழுவதுமே நூற்றுக் கணக்கில் இராமர் கோயில்கள் உள்ளன. இவற்றுள் எது அவர் ஜனனம் எடுத்த இடம் என்பதில் அபிப்பிராய பேதங்கள் உள்ளன.

ஜன்மஸ்தானம் என்று இப்போழுது கட்டப்பட்டுள்ள கோயில் இருந்த இடத்தில் ஏற்கெனெவே கோயில் இருந்து இருமுறை அழிக்கப்பட்ட அடையாளத்தைத்தான் தொல்லியல் காட்டுகிறது. 1976-77-இல் முதன் முதலில் அங்கு தொல்லியல் துறை ஆராய்ந்தபோது, அது மசூதியாக இருந்தது. அதில் 12 தூண்கள் ஹிந்துக் கோயில் தூண்களாக இருந்தன. பூர்ணகலசம், மகர நீர் வாய் போன்ற அமைப்புகளும் இருந்தன. பிறகு, மசூதி இடிக்கப்பட்ட பிறகு பூமிக்கு அடியில் இருக்கும் அமைப்புகளைப் பார்க்கும் வண்ணம் ஆய்வுகள் நடந்தன. அவற்றின் மூலம், ஐம்பதுக்கும் மேற்பட்ட தூண்களது அடிப்பகுதிகள் பதினேழு வரிசைகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன. கோயில் சிற்பங்கள் பலவும் உடைந்து புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இவற்றின் தொன்மை இரண்டாயிரம் வருடங்கள் வரையில், அதாவது, குஷானர்கள், பிறகு, குப்தர்கள் காலம் வரையில் மட்டுமே சொல்லும் வண்ணம் இருக்கின்றன. அதாவது கோயில் இருந்தது. அதைக் கொண்டு இராமன் காலத்தைச் சொல்லும் வண்ணம் ஆதாரம் கிடைக்கவில்லை. ஆனால் இந்தக் கோயில் இருந்த இடம் தான் மீண்டும், மீண்டும் அழிக்கப்பட்டு, கட்டப்பட்டிருக்கிறது.

இராமாயண காலத்திலிருந்து தேடினால், அண்ட சராசரங்களையும் இராமன் வைகுந்தத்துக்கு ஏற்றிக் கொண்டு போனபின் அயோத்தியில் யாருமே இல்லை. இராமனது மகன் லவன், ஸ்ரவஷ்டியைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரியலானான். குஸன், விந்தியமலைப் பகுதியிலுள்ள குஷாவதியிலிருந்து ஆள ஆரம்பித்தான். ஜைனர்களது முதல் தீர்த்தங்காரரான ரிஷப தேவரது காலம் வரை அயோத்தியாவில் மக்கள் நடமாட்டம் இல்லை என்று சொல்லப்படுகிறது. அதற்குப் பிறகு, அங்கு இராமன் பிறந்த மற்றும் வாழ்ந்த இடங்களைக் கோயிலாக்கி வணங்கி இருக்கிறார்கள். குறிப்பாக விக்ரம சஹாப்தத்தைத் துவங்கின விக்கிரமாதித்த அரசன் காலம் முதல், அயோத்யா பழம் பெருமையையும், புகழையும் அடைந்ததது என்கிறார்கள். ஜன்மஸ்தானத்தில், விக்கிரமாதித்தன் அதி அற்புதமான கோயிலைக் கட்டியிருக்க வேண்டும். ஆழ்வார்கள் கண்ட இராமர் கோயில் இந்தக் காலக்கட்டம், மற்றும் இதற்கு  முந்தினதாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

அந்தக் கோயில் 11-ஆம் நூற்றாண்டில் ஸாலர் மசூத் என்பவனால் அழிக்கப்பட்டது. இந்த ஸாலர் மசூத், சோமநாதபுரத்தை அழித்த கஜினி முஹம்மதுவின் தங்கை மகன். இவனது கூட்டாளிகள்தாம், மேல்கோட்டையை அழித்து, இராமப்பிரியனைக் கவர்ந்து சென்றவர்கள். அவர்களே தொண்டனூர் கோயில்களையும் சூறையாடியவர்கள். அந்த ஸாலர் மசூத்தை, ஸ்ரவஷ்டியைச் சேர்ந்த சுஹேல் தேவ் கொன்றான். அதன் பிறகு, ஜன்மஸ்தானக் கோயில் மீண்டும் கட்டப்பட்டது. கோயில் அழிவுற்று இருந்த போதும், மக்கள் அந்த இடத்தில் இராமனை வழிபட்டிருக்கிறார்கள். இதுவே, இந்தக் கோயில் ஜன்மஸ்தானமாக இருந்திருக்க வேண்டும் என்பதற்குச் சான்று என்கிறார்கள்.

11-12 நூற்றாண்டுகளில் அயனசந்திரன் என்னும் கஹர்வால் அரசன் அதே இடத்தில் இராமர் கோயிலை உன்னதமான முறையில் கட்டினான். அதற்கான கல்வெட்டு ஆதாரம் பாபர் மசூதியை இடித்த போது கிடைத்தது. அதில் பெருமாள் பெயர் ‘ஹரி விஷ்ணு’ என்று குறிக்கப்பட்டுள்ளது. வாலியையும், தசானனனையும் கொன்ற ஹரி விஷ்ணுவின் கோயில் என்று எழுதப்பட்டுள்ளது. இந்தக் கோயிலின் இருப்பிடமே இராமர் பிறந்த இடம் என்று மக்கள் கொண்டாடுவதாகவும், வழிபடுவதாகவும், அன்றைய முகலாய சரித்திர ஆய்வாளர்களும், வழிபோக்கர்களும் எழுதியுள்ளனர். சீதையின் சமையலறையின் மீதுதான் பாபர் மசூதி கட்டப்பட்டதாக, மிர்ஜா ஜன் என்பவர் எழுதியுள்ளார். இராமன் பிறந்த அரண்மனையை அழித்து மசூதி கட்டப்பட்டதாக இன்னொரு முகலாய எழுத்தாளர் எழுதியுள்ளார்.

பெர்ஷிய மொழியில் எழுதப்பட்டுள்ள ஒரு நூலில், இராமனது அரண்மனைப் பகுதிகள் விரிவாக எழுதப்பட்டுள்ளன. அதன் மூலம், ஆதியில் எழுப்பட்ட கோயில், இராமனுடைய அரண்மனையின் பகுதிகளை அப்படியே தக்க வைத்துக் கொண்டு எழுப்பப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது. முகலாயர்கள் அதை ஆக்கிரமித்தபோது, அங்கு மூன்று கோயில்கள் இருந்தனவாம்: அவை ஜன்மஸ்தானம், ஸ்வர்கத்வாரம் எனப்பட்ட ராமரது தர்பார் மண்டபம், த்ரேதா கா தாகூர் என்னும் ராமர் கோயில். இவை அனைத்தையும் அழித்து, ஜன்மஸ்தானத்தில் பாபர் மசூதி எழுப்பப்பட்டது.

அவை அனைத்தையும் இழந்த நாம் மீண்டும் அதே இடத்தில் இராம ஜன்மஸ்தானக் கோயிலைக் கட்டுகிறோம். இராமன் வாழ்ந்த காலத்தைக் காட்டும் தொல்லியல் சான்று இன்றுவரை அயோத்தியில் கிடைக்கவில்லை. ஆனால் அப்படிப்பட்ட சான்று ஒன்று தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. அது இராமர் கட்டிய சேதுவில் கிடைக்கிறது.

இராமர் சேது: செப்பேட்டு ஆதாரம்

தனுஷ்கோடியையும், மன்னார் பகுதியையும் இணைக்கும் இராமர் சேது, இராமரால் கட்டப்பட்டது என்ற செய்தியை, இராஜேந்திர சோழனது திருவாலங்காடு செப்பேடுகள் தெரிவிக்கின்றன. தன்னுடைய தகப்பனான இராஜராஜ சோழனைப் பற்றிச் சொல்லும் போது, இவ்வாறு எழுதியுள்ளான்.

“"இராகவர்களின் தலைவன் (அதாவது, இராமன்) சமுத்திரத்தின் குறுக்கே  திறமையான வானரர்களைக் கொண்டு பாலம் கட்டி, கடலைத் தாண்டி, இலங்கை மன்னனைக் (இராவணனைக்) கொன்றான்.” (80-ஆவது வரி)

அதே பகுதியை, அருள்மொழிவர்மன் (இராஜராஜ சோழன்) கப்பற் படையைக் கொண்டு கடந்து சென்று இலங்கை மன்னனை அழித்தான் என்று எழுதியுள்ளான். எனவே இராமர் சேதுப் பகுதி, இராமர் கட்டிய அணைப் பகுதியே என்பதே வழிவழியாக சொல்லப்பட்டு வந்து, செப்பேட்டிலும் இடம் பெற்றிருக்கிறது.

இராமர் சேதுவில் புவியியல் ஆய்வுகள்

வானர சேனைகள் பல கற்களையும், மரங்ககளையும் அடுக்கி, அணையை உருவாக்கினார்கள் என்று வால்மீகி இராமாயணம் கூறுவதால், அங்குள்ள கற்களையும், நில அமைப்புகளையும் புவியியல் சோதனை செய்தால் அதன் காலத்தைக் கண்டுபிடிக்க முடியும். அதன் மூலம், இராமாயண காலத்தையும் கண்டு பிடிக்கலாம் என்று 2007 ஆம் ஆண்டிலேயே ஆய்வுகள் நடந்தன.

அவை காட்டிய முக்கிய விவரம், பாரதமும், ஸ்ரீலங்கையும், நிலத்தால் இணைக்கப்பட்டுள்ளன என்பதே. அதாவது, ஸ்ரீலங்கை, பாரதத்தின் நிலநீட்சியே. ஆனால் இந்த நில இணைப்பு தற்சமயம் நீருக்குள் முழுகி இருக்கிறது. ஒரு காலக்கட்டத்தில் அது கடல் நீருக்கு மேலே இருந்திருக்கிறது. அப்பொழுது, மக்கள் அதன் மீது நடந்து சென்று கடந்திருப்பார்கள். பாலம் கட்ட வேண்டிய அவசியம் அப்பொழுது இல்லை. அப்படிப்பட்ட காலம் இராமாயண காலத்துக்கு முன் இருந்திருக்க வேண்டும். கடல் மட்டம் உயர்ந்து, அது நீரில் முழுகின பிறகுதான் இராமாயணம் நடந்திருக்க வேண்டும். பாலம் அமைத்து அதைக் கடக்க வேண்டிய அவசியம் இராமாயண காலத்தில்தான் ஏற்பட்டிருக்க வேண்டும். எனவே கடல் மட்டம் உயர்ந்த கால விவரத்தைக் கண்டுபிடித்தால் நம்மால் இராமாயண காலத்தைச் சொல்லிவிட முடியும்.

கடல் மட்ட ஆய்வுகள், இன்றைக்கு 18,000 ஆண்டுகள் வரை அளவீடுகளைத் தருகின்றன. கடுமையான பனி யுகம் இருந்த நேரம் அது. அப்பொழுது கடல் மட்டம் இன்றைய அளவைவிட 130 மீட்டர் குறைவாக இருந்தது. அப்பொழுது, நில இணைப்பு இயற்கையாகவே ஒரு பாலம் போலப் பயன்பட்டது. இன்றைக்கு 18,000 ஆண்டுகள் முன்பிலிருந்து, பனியுகம் மறைய ஆரம்பித்து, வெப்பம் பரவ ஆரம்பித்தது. இதனால், பனி உருகி, கடல் மட்டம் கொஞ்சம் கொஞ்சமாக உயரத் தொடங்கியது. இதன் காரணமாக, இன்றைக்கு 7200 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்து, 6800 ஆண்டுகள் வரை, இந்த நில நீட்சி கொஞ்சம் கொஞ்சமாக நீருக்குள் மறைய ஆரம்பித்தது. அந்த சமயத்தில்தான், நீருக்கு அடியில் மறைந்த நிலநீட்சியின் மீது, பாறாங்கற்களைப் போட்டு அதன் உயரத்தை அதிகப்படுத்த வேண்டியிருந்தது.

இந்தக் கணக்கின்படி, இராமாயணம் 7000 வருடங்களுக்கு முன்னரே நடந்திருக்க வேண்டும். இரண்டாம் தமிழ்ச் சங்கத்தின் தலைநகரமான கவாடத்தின் உச்சபட்ச காலமும் அதுவே என்று முந்தின கட்டுரையில் காட்டியிருந்தோம்.

இனி இந்தப் பாறாங்கற்களைக் கொண்டு செய்த ஆய்வுகளைக் காண்போம். National Institute of Ocean Technology என்னும் ஆய்வுக் கழகம், மத்திய அமைச்சரவையின் கீழ் இயங்குகிறது. இந்தக் கழகம் மேற்கொண்ட ஆய்வில், இராமர் சேதுவின் மீது பத்து இடங்களில் துளைகள் போடப்பட்டன. ஆறு மீட்டர் ஆழம் சென்றவுடன்,  கடல் மண் தென்பட்டது. மேலும் துளைத்தபோது, நான்கு முதல் ஐந்து மீட்டர் ஆழம் வரை, கடினமான படுக்கையாக கற்களும், பவழப்பாறைகளும் தென்பட்டன. மேலும் துளையிட்ட போது, அந்தப் பவழப்பாறைப் படுக்கைகள் கடல் மணல் மீது இருப்பது தெரியவந்தது. கடல் மணலை மேலும் துளைத்தால், கடினமான நிலமே தென்பட்டது.

இதில் தெரியவந்தது என்னவென்றால், அடித்தளமான நிலநீட்சியின் மீது, கடல் மணல் பரப்பப்பட்டு, அதன் மீது, 4 -5 மீட்டர் உயரத்துக்கு பவழப்பாறைகள், பலவிதமான கற்கள், மரத்துண்டுகள் ஆகியவை அடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றின் மீது கடல் மணல் பரப்பப்பட்டிருக்கிறது. அதற்கு மேலே கற்கள், மண் என இவை அழுத்தமாகப் படிந்திருக்கின்றன.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், பவழப்பாறைகள் கடல் மணலில் உருவாகாது. பவழப்பாறைகள் இராமேஸ்வரம், தனுஷ்கோடி போன்ற இடங்களில் இயற்கையாகக் கடலோரத்தில் காணப்படுகின்றன. அவை உடைக்கப்பட்ட அமைப்பிலும் இருக்கின்றன. அவற்றை உடைத்து, நில நீட்சியின் மீது கடல் மணலைப் பரப்பி, அதன் மீது யாரேனும் போட்டிருந்தால்தான் பவழப்பாறைகள் அங்கு வரமுடியும். இன்று சேதுவுக்குச் செல்பவர்கள் ‘மிதக்கும் கல்’ என்று கொண்டு வருகிறார்களே அவை இந்த பவழப் பாறைக் கற்களே.

மேலும், இந்த அமைப்புகளை ஆராய்ந்த விஞ்ஞானிகள் மேலேயுள்ள கற்களும், பவழப்பாறைகளும் 7000 ஆண்டுகளுக்கு முந்தையவை என்று கண்டுபிடித்தார்கள். ஆனால் அவற்றுக்குக் கீழே உள்ள கடல் மண் படுக்கை, 4000 வருடங்களுக்கு முந்தையது என்கிறார்கள். இரண்டு முறை கடல் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது என்றும் கண்டு பிடித்திருக்கிறார்கள் – 7000 வருடங்களுக்கு முன்பும், 4000 வருடங்களுக்கு முன்பும்.

வெள்ளத்திலிருந்து பாலத்தை உயர்த்த பழைய கற்கள் அடியிலும், புதிய கற்களும், மணலும் மேலாகவும் இருக்க வேண்டும். ஆனால் இங்கு மாறி இருக்கிறது. இதைச் சொல்லும் வெளி நாட்டு விஞ்ஞானிகளுக்கு இது வியப்பாக இருக்கிறது. ஆனால் நமக்கு வியப்பே இல்லை. 7000 ஆண்டுகளுக்கு முன், முதல் முறையாகப் பாலம் போடப்பட்டிருக்கிறது. இராமன் கடற்கரைக்கு வந்த போது ஓரிரு அடி ஆழத்தில் நில நீட்சி இருந்திருக்கிறது. அதற்கு முன் வரை ஆங்காங்கே நில நீட்சி வெளியே தெரிந்திருக்கும். சூர்ப்பனகை, மாரீசன் போன்றவர்கள் நடந்தே வந்திருப்பார்கள்.

ஆனால், இராமனது வன வாசம் முடிக்கும் போது, கடல் பொங்கியிருக்கிறது. நில நீட்சி நீரில் அமிழ்ந்து இருக்கிறது. அதை உயர்த்த கடல் மணலைப் போட்டு ஒரு தளம் அமைத்து அதன் மேல் பவழப்பாறைகளையும், மரம், கல் போன்றவற்றையும் நான்கிலிருந்து ஐந்து மீட்டர் உயரத்துக்கு அடுக்கி இருக்கிறார்கள். இந்தப் பாலம் இன்றைக்கு 4000 ஆண்டுகளுக்கு முன் வரை நீருக்கு மேலேயே இருந்திருக்கிறது. ஆய்வின்படி, 4000 ஆண்டுகளுக்கு முன் கடல் மட்டம் மீண்டும் உயர்ந்திருக்கிறது தெரிய வருகிறது. அப்பொழுது இராமர் கட்டின சேது முழுகி விட்டது. அந்த சமயத்தில் வாழ்ந்த மக்கள், அதன் புனிதத்துவத்தைக் கருதி, அப்படியே அந்தக் கற்களை எடுத்து, புதிதாக மணல் பரப்பி, அதன் மீது பழைய கற்களை அடுக்கி, பாலத்தைக் கட்டியிருக்கின்றனர். இதனால், 4000 ஆண்டுகளுக்கு முந்தைய மணல் அடியிலும், அதன் மீது, 7000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்களும்  அமர்ந்திருக்கின்றன.

இந்த மாறுபட்ட கால அமைப்பைக் கொண்ட மணல் மற்றும் கற்கள் இராமர் சேதுவின் காலத்தை நிரூபிக்கும் காரணிகளாக இருக்கின்றன. 7000 ஆண்டுகளுக்கு முன் இராமர் சேது கட்டப்பட்டிருக்கிறது என்பதற்கு இராமர் சேதுவே தொல்லியல் ஆதாரமாக இருக்கிறது. நான்கு மைல் அகலத்துக்குக் காணப்படும் சேதுப் பாலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வரை சோலைகளும், மரங்ககளும் கொண்டதாக இருந்திருக்கிறது. 10- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அல்பெரூனி என்னும் முகலாய சரித்திர ஆய்வாளர் சேதுப் பாலம் ஆங்காங்கே கடலால் அரிக்கப்பட்டிருந்தது என்றும், அங்கு வானரங்கள் பல இருந்தன என்றும் எழுதியுள்ளார். அந்த வானரங்களுக்கு மக்கள் உணவு படைப்பார்கள் என்றும், ராம ஜபம் செய்தால் அவை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்கும் என்றும் கூறியுள்ளார். வழி தெரியாமல் தடுமாறுபவர்களை அவை வழி காட்டிச் செல்லுமாம்.

கடல் அரிப்புகள் ஏற்பட்டாலும், அவ்வப்பொழுது அவற்றைப் பழுது பார்த்திருக்கிறார்கள். 1480 வரை மக்கள் இராமர் சேதுவை, ஒரு தரை வழிப் பாலமாகப் பயன்படுத்தி இருக்கின்றனர். அதற்குப் பிறகு புயல்களால் சேதம் ஏற்பட்டு, அன்னியர் ஆட்சியும் வந்த பிறகு, அதன் முக்கியத்துவமும், பயன்பாடும் மறக்கப்பட்டு விட்டது. இராமாயண காலத்துக்கு முக்கியத் தொல்லியல் சான்றாக இருக்கும் அதனைக் காத்து, பழையபடி இராமர் அமைத்த கற்களால் அமைக்க வேண்டியது நமது கடமை.

இந்தப் பாலம் காட்டும் 7000 வருடத் தொன்மை, இராமர் பிறந்த த்ரேதா வருடத்துக்கு எவ்வாறு பொருந்தும் என்பதை இனி காண்போம்.

 ***

 


Received International Women's day Award

This is to share with my readers that I was honoured by Swadeshi Jagran Manch, Chennai Chapter, on the International Women's Day, 2024. In a function conduced at the Kamakoti Hall in Sri Krishna Gana Sabha, T.Nagar, they honored women from different fields. I express my thanks to whoever have nominated my name for this award. It is an acknowledgement of my research work towards serving Sanatana Dharma and is truly motivational. 

Me receiving the citation from Dr. Usha Sriram, Mr. Murali and Smt. Lakshmi Menon