Friday, June 21, 2024

My talk about Yoga and International Yoga Day (Mediyaan News)

Today is International Yoga Day. Watch the video where I talk about it.

I have given evidence from Tholkappiyam and temple architecture that Tamil people were practicing yoga from an undated past. The Siddha-s practiced yoga. The origins of Yoga can be traced to Valakhilya-s and to Dhruva even before them. By the prevalence of an asana by name Valakhilyasana, we understand the description about them in the Mahabharata on how they did tapas by hanging from tree-branches. With one leg bent around a branch, they stretched their body upside down and balanced with their hands holding the other leg.



Yoga, as part of Astika darshana-s is attributed to rishi Patanjali and practiced as Ashtanga yoga in a comfortable asana for the sake of Realisation of the Ultimate Reality. Today we have adopted the asana feature alone as a means of bettering our health. In his maiden speech in the UN Assembly in 2014, our PM, Modi suggested Yoga to overcome many a life-style problems of the current times. It was welcomed by a record number of countries and resulted in observing International Yoga Day every year on 21st June. This date happens to be the day of summer solstice when daytime is the longest in the northern hemisphere.

Though our country had released coins and stamps in connection with this day, the UN also released 10 stamps with pictures of asanas and OM next to them. 


Though certain communities resisted the use of OM and Namaskar in the poses, it must be remembered that the upper echelons of those communities have no problem in learning and practising Yoga in its original form. Even the Gulf countries have added Yoga in their school curriculum.

In the current times, Yogasana was popularised by Thirumalai Krishnamachari who received the knowledge from his remote ancestor, Sriman Nadamunigal, through trance. Nadamunigal himself was a beneficiary of Yogic practice that he received 4000 Divya Prabhandam-s of Azhwars by focusing on the verses of Madhurakavi Azhwar in praise of Nammazhwar. Nammazhwar himself was a yogi seated in Padmasana in which state he could see Vishnu in different kshetras.

With such amazing events seen in our country, it is surprising to see archaeological finds in Mexico in yogic postures. I talk about these poses in Olmec and Tlatilco cultures that thrived 3000 years ago. 



The Indus region in Bharat has much older evidence of seals with images in Yogic asanas and even a skeleton unearthed in Yogic samadhi. 


The Mexican evidence perhaps can be traced to Mayan who built the city and palace for the Pandavas in the Mahabharata 5000 years ago before he moved out of Bharat.

I wind up this talk with an appeal to learn yoga from a trained teacher and practice it regularly for a healthy life. Please watch this talk which is in Tamil and share.  



Saturday, June 1, 2024

Review of my book 'Ramanuja Itihasam' (Tamil) by Mahara Sadagopan

This review is by Mr. Mahara Sadagopan who has authored four books on Sri Vaishnavism. My sincere thanks to him for writing a review of my book 'Ramanuja Itihasam'. 



From https://harshaaintutions.blogspot.com/2024/05/blog-post_31.html

திரு நாகஸ்வாமி  என்ற தொல்லியல் துறை வல்லுநர், இராமானுசரின் வாழ்க்கை சம்பவங்கள் என்பது புனைவு என்றும், பொய் என்றும் சொல்லி அவரது சைவ வெறியைக்  தீர்த்து ஒரு புத்தகம் எழுதியிருந்தார். அதாவது இராமானுசரின் வாழ்க்கை பொய் என்று நிரூபித்து  விட்டால் வைணவத்தை எளிதில் வீழ்த்திவிடலாம் என்ற அற்ப சந்தோஷத்தின் காரணமாக, வெறி உந்தப்பட்டு எழுதிய புத்தகம் “Ramanuja myth and Reality“. 

அவர் எடுத்து வைத்த வாதங்களில் முக்கியமாக இரண்டு வாதங்கள் என்பது, 
1. இராமானுஜர் சோழ தேசத்திலிருந்து  வெளியேறியது என்பது சோழ அரசனின் துன்புறுத்தல் அல்ல, அப்பொழுது ஆட்சி செய்த குலோத்துங்கன் சமய வெறுப்பு அற்றவன், மேலும் பல கைங்ஙர்யங்களைச்  செய்தவன் என்று கல்வெட்டு மூலம் நிரூபித்து , வைணவர்கள் புனைந்து சோழ அரசின் மீது பழியை வீசுகின்றனர் . ஆதலால் எந்தவொரு கொடுமையும் நடக்கவில்லை , நடக்காத ஒன்றை  பொய் பரப்புகின்றனர்.
2. இராமானுஜர் மேலக்கோட்டை சென்று, அங்குள்ள உற்சவ மூர்த்தியை டில்லியிலிருந்து மீட்க வில்லை, ஏனென்றால் மேலக்கோட்டை  மற்றும் தென்னிந்தியா பகுதிகள் இராமானுஜ வாழ்ந்த காலத்தில் முஸ்லீம் படையெடுப்பால் பாதிக்கப்படவில்லை. அப்படியிருக்க இடிந்த  கோயில்களை புனர்நிர்மாணம் செய்தது, டில்லி சுல்தான் அரண்மனையிலிருந்து உற்சவ மூர்த்தியை மீட்டது எல்லாம் வைணவர்களால் புனைந்து  கூறப்பட்ட தகவல்கள் என்று கூறி, அதுவும் பொய் என்று எழுதியிருந்தார். 

மேலும் இந்த இரண்டு  செய்திகளுடன் இராமானுஜர் வாழ்ந்த காலம் என்பது 120 என்பது ஒரு கற்பனை, பல வைணவ ஆசாரியார்கள் 100 வயதைக் கடந்து வாழ்ந்தார்கள் என்று கூறுவதும் ஒரு பொய் என்று திரு நாகஸ்வாமி  அவர்கள் எழுதியிருந்தார். 

இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வண்ணம் முதலில்  ஶ்ரீ வைஷ்ணவ ஶ்ரீ கிருஷ்ணமாச்சாரி   ஸ்வாமி “Ramanuja A Reality Not a myth “ என்ற புத்தகத்தை அக்டோபர் 2009 ல் வெளியிட்டார். அதில் இராமானுஜரின் சமகாலத்தில் வாழ்ந்த வைணவ ஆசாரியர்களின் நூல்களிலிருந்து பல செய்திகளை வழங்கி திரு நாகஸ்வாமி  சொல்வது தவறு என்று எழுதியிருந்தார். ஆனால்  வரலாற்று ஆதாரங்களுடன், சம்பவங்களின் காலத்தை  நிரூபிக்கும்போது மட்டுமே ஏற்றுக்கொள்வார்கள். சமுதாயமும் கூட இதற்கு விதிவிலக்கல்ல.

இராமானுஜ வாழ்க்கை சம்பவங்களின் நிகழ்வுகளை ஆசாரியர்களின் நூல்கள், அரசின் கல்வெட்டுகள், செப்பேடுகள், அரசர்கள் வாழ்ந்த காலத்தில் இயற்றப்பட்ட நூல்கள் இவற்றையெல்லாம் உற்று நோக்கி, அதில் குறிப்பிட்டுள்ள காலத்தை பொது யுகம் காலத்துடன் ஒப்பிட்டு, சம்பவங்களின் காலத்தை இராமானுஜர் வாழ்க்கையுடன் நிரூபித்து, வைணவ ஆசாரியர்கள் எழுதிய செய்திகள் அனைத்தும் உண்மை, உண்மையைத் தவிர வேறில்லை என்று எழுதிய நூல்தான் “இராமானுஜ இதிகாசம்” என்ற அருமையான நூல். நூலாசிரியர் ஜெயஶ்ரீ சாரநாதன் அவர்கள் காலத்தால் அழிக்கப்படமுடியாத அளவுக்குக் காலத்தை நிர்ணயித்து, வைணவ ஆசாரியர்கள் நூல்களில் கூறிய சம்பவங்களுக்கு மேலும் நம்பகத் தன்மையை அதிகரிக்கும் வண்ணம் எழுதப்பட்ட இந்த அதி அற்புதமான நூலை ஒவ்வொரு வைணவனும் வீட்டில் வைத்துப் பாதுகாக்கப்பட வேண்டியது தலையாயக் கடமை.  

நூலாசிரியர் இந்த புத்தகத்தில் முதன்மை ஆதாரமாக இராமானுஜர் காலத்தில் வாழ்ந்த வைணவ ஆசாரியர்கள் நூல்களான குறிப்பாக ஶ்ரீ வடுக நம்பி எழுதிய யதிராஜ வைபவம் , ஶ்ரீ இராமானுஜ அஷ்டோத்தரசத நாமாவளி, திருவரங்கத்து அமுதனார் எழுதிய இராமானுஜ நூற்றந்தாதி, கெருட வாகன பண்டிதர் எழுதிய “ திவ்யசூரி சரிதம்”, இரண்டாம் தர ஆதாரமாகக் கோயில் ஒழுகு , மற்றும் பின்பழகிய பெருமாள் ஜீயர் எழுதிய குருபரம்பரா ஆறாயிரப்படி போன்றவற்றிலிருந்து செய்திகளை எடுத்துக் கொண்டு, அதை நிரூபிக்கும் வண்ணம் ஃபிரான்ஸிஸ் புக்கானன் நூல் குறிப்புகள், பி.எல்.ரைஸ் நூல் குறிப்புகள், கலிங்கத்து பரணி, விக்ரமாங்க தேவ சரிதம்,விக்கிரம சோழன் உலா, குலோத்துங்கச் சோழன் உலா, ராஜராஜ சோழன் உலா போன்ற நூல்களிலிருந்தும், பல கல்வெட்டுகள், செப்பேடுகள் செய்திகளையும் ஒப்பிட்டு, சம்பவங்களின் காலத்தை இராமானுஜரின் வயதுடன் நிரூபணம் செய்து, இராமானுசரின் வாழ்க்கை நிகழ்வுகளை உண்மை என்று இந்த புத்தகத்தில் நிரூபணம் செய்துள்ளார். இது காலத்தால் பாதுகாக்கப்பட வேண்டிய நூல். ஒவ்வொரு இராமானுஜ சீடனும் படித்து நிகழ்வுகளை உள்வாங்கி மனதில் நிறுத்த வேண்டிய பல விஷயங்கள் இந்த புத்தகத்தில் புதைந்து கிடக்கின்றன.‌

திரு நாகஸ்வாமி அவர்களுக்கு மறுப்பு தெரிவிக்கும் வண்ணம், இந்த நூலில் காலத்துடன் இராமானுஜர் பிறந்த பிங்கல வருடம், பொ.யு.1017லிருந்து பின்வருமாறு நிரூபித்துள்ளார்

1. இராமானுஜர் கர்நாடக சென்ற வருடம் காளயுக்தி என்றும், அதாவது அவரது வயது 61.‌ பொ.யு. 1078.‌

2. தொண்டனூரில் 21 ஆண்டுக் காலம் தங்கி, அவர் மேலைக் கோட்டை சென்ற வருடம் பஹுதான்ய பொ.யு. 1099. இராமானுஜர் வயது 81.

3. 12 வருட காலம் இருந்து , கிருமி கண்ட சோழன் இறந்த பிறகு ஶ்ரீரங்கம் திரும்பியது கர வருடம் பொ.யு.1111. இராமானுஜர் வயது 94. 

4. திருப்பதி மடம் நிறுவுதல் விகாரி வருடம் பொ.யு.1120 , அவரது வயது 102. 

5. திருப்பதியில் சிதம்பர கோவில் கோவிந்த ராஜரைப் பிரதிஷ்டை செய்த வருடம் ஸௌம்ய, பொ.யு.1130. அவரது வயது 112. 

தொண்டனூரிலுள்ள மீர்பகதியார் என்ற துருக்கியரின் கல்லறையின் மூலம் முஸ்லீம் படையெடுப்பு என்பது தென்னிந்தியாவில் 1031ம் ஆண்டு நடைபெற்றது என்று ஆதாரத்துடன் நிரூபணம் செய்ததன் மூலம், முதல் தகவல் வைணவ ஆசாரியர்களின் கருத்து என்பது உண்மை என்று உரைத்துள்ளார் நூலாசிரியர்.‌

வரலாற்றாளர்கள் அதிராஜேந்திரன் ஒருவனே கிருமி நோயால் பாதிக்கப்பட்ட சோழன், அவன் 1068ம் ஆண்டு பதவியேற்று மூன்று ஆண்டுகளில் அதாவது 1070ம் ஆண்டு இறந்து விட்டதாகவும் கூறி, இராமானுஜரின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கியுள்ளனர். 

மாறாக இந்த புத்தகத்தில் அதிராஜேந்திரன் இறந்த வருடம் என்பது பொ.யு. 1111 (அதாவது இராமானுஜர் ஶ்ரீரங்கம் திரும்பிய வருடம்) என்று நூலாசிரியர் நிரூபணம் செய்வதன் மூலம் அனைத்தும் உண்மை என்று நிரூபணம் ஆகிவிட்டது. 

மேலும் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் சிதம்பரம் கோவிந்த ராஜருக்கு ஏற்பட்ட சம்பவத்தையும் (கடலில் தூக்கி எறியப்பட்ட) ஆதாரத்துடன் ஆசிரியர் நிரூபித்துள்ளார். 

மேலும் திப்புசுல்தான் காலத்தில் வைணவம் சந்தித்த இன்னல்களையும் ஆதாரத்துடன் எழுதியுள்ளார். 

இராமானுசரின் வாழ்க்கை என்பது சரித்திரத்தின் உண்மையை நிலை நாட்டுவதற்குத் துணை நின்றுள்ளது என்பது இந்த புத்தகத்தின் மூலம் அறிய முடிகிறது. வரலாற்று ஆசிரியர்கள் அறியப்படமுடியாத சம்பவங்கள் வைணவ ஆசாரியர்கள் அவர்கள் எழுதிய நூல்களில் இருப்பது என்பதும், அவைகள் அனைத்தும் உண்மை என்று இந்த புத்தகம் காட்டுகிறது.‌

ஒவ்வொரு இராமானுஜ சீடர்களும், வரலாற்றாளர்களும் படித்துப் பாதுகாக்கப்பட வேண்டிய அற்புதமான நூல்.

மகர சடகோபன் தென்திருப்பேரை 

***

புத்தகத்தைப் பெற இங்கே க்ளிக் செய்யவும் சுவாசம்

Review of my book 'Who killed Aditya Karikala?' (Tamil) by Mr. Aswath

ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்?


எழுதியவர்: ஜெயஸ்ரீ சாரநாதன்
வெளியீட்டாளர் ஸ்வாசம் பதிப்பகம்
தொடர்புக்கு: swasambookmart.com
பொன்னியின் செல்வனைக் கல்கி எழுதி இருக்காவிட்டால் இந்தத் தலைப்பு இவ்வளவு தூரம் போணி ஆகியிருக்காது. கல்கி எழுதியது ஒரு புனைவு. அதைச் சில சரித்திர உண்மைகளை வைத்து கட்டமைத்து இருக்கிறார் என்பதைத் தவிர அது பல உண்மைகளுக்குச் சமீபத்தில் இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. என்றாலும் அதில் உள்ள பல விஷயங்களை படித்த எல்லோருமே நம்பிக் கொண்டும் நம்ப விரும்பிக்கொண்டும் தான் இருக்கிறார்கள். கல்கி எழுத்தின் வீச்சு அப்படிப் பட்டது. சோழ நாட்டுக்காரர் ஆன அவர் சோழர்களை உயர்த்தியும் பாண்டியர்களை மட்டம் தட்டியும் எழுதி இருக்கிறார். அதற்குத் தகுந்த மாதிரி பாண்டிய நாட்டு ஆபத்து உதவிகள் நந்தினி ஈழத்து ராணி உத்தம சோழனின் பிரதியாக மதுராந்தகன் (இருவரும் ஒருவர் தான்) என்று கற்பனா கதா பாத்திரங்களை வைத்துப் புகுந்து விளையாடி இருக்கிறார்.

ஆதித்த கரிகாலன் படு கொலையில் சரித்திரக் கல்வெட்டுகளை ஆய்ந்து எழுதிய சதாசிவப் பண்டாரத்தாருக்கும் நீலகண்ட சாஸ்திரிக்குமே அபிப்ராய பேதங்கள். நீலகண்ட சாஸ்திரி உத்தம சோழனுக்கு கரிகாலன் கொலையில் சம்பந்தம் இருக்கலாம் என்று எழுத பண்டாரத்தார் அந்தணர்களின் சதியால் அவன் கொல்லப் பட்டிருக்கக் கூடும் என்று கருதினார். கல்கி எழுதியதே புனைவு எனும்போது 'உடையாரில்' பாலகுமாரன் தோன்றியதை எல்லாம் எழுதி விட்டுப் போனார். போதாது என்று மணிரத்தினத்தின் கூத்து வேறு.

ஆதித்தன் கொலை குறித்த கல்வெட்டுச் சான்றுகள் கொஞ்சம் தான். அதில் குறிப்பாக உடையான்குடிக் கல்வெட்டு பெருத்த முக்கியத்துவம் பெறுகிறது. இதில் ரேவதாச கிரமவித்தன், ரவிதாசன் (பஞ்சவன் பிரம்மாதி ராஜன்), இருமுடிச் சோழ பிரம்மாதி ராஜன் போன்ற பிராமணர்களின் பெயர்கள் கொலையில் சம்பந்தப் பட்டிருப்பதாய்க் குறிப்பிடப் படுகிறார்கள். கல்கியின் பொன்னியின் செல்வனையும் இந்தக் கொலைக்கு காரணிகளையும் மட்டுமே வைத்து இந்தப் புத்தகத்தை எழுதி இருக்கிறார் ஜெயஸ்ரீ.

பொதுவாக சரித்திர ஆராய்ச்சி செய்பவர்கள் பல விஷயங்களை ஒப்பு நோக்க வேண்டும்.
1. கல்வெட்டு என்றால் அதை ஒப்பீடு செய்யும் விதமாக வேறு கல்வெட்டுகளையும் ஆராய வேண்டும். ஏன் என்றால் கல்வெட்டுகளிலும் உண்மைக்குப் புறம்பான புனைவுகள் உண்டு.
2. இவற்றை இலக்கிய ஆதாரங்கள் மற்றும் செவி வழிச் செய்திகளுடனும் ஒப்பு நோக்க வேண்டும்.
3. இவற்றிற்கான கால நிர்ணயத்தை துல்லியமாகச் செய்ய வேண்டும். இதற்கு வெளி நாட்டுக் கணக்கீடு முறைகள் பயன் அளிக்காது. ஏன் என்றால் இந்தியக் கணக்கீடு முறைகளும் அன்னியக் கணக்கீடு முறைகளும் வெவ்வேறானவை.
இந்த மூன்று முறைகளையும் கச்சிதமாகப் பயன் படுத்தி இருக்கிறார் ஜெயஸ்ரீ. இதை வைத்து இவர் வரும் முடிவுகள் பின் வருமாறு:

1. ஆதித்தன் சுந்தர சோழன் இறந்த பின் தான் கொல்லப் பட்டான்.

2. உத்தம சோழனும் மதுராந்தகனும் ஒருவனே.

3. பார்த்திபேந்திரனும் ஆதித்தனும் ஒருவனே.

4. கண்டராதித்தன் வீர பாண்டியனால் கொலை உண்டான்.

5. இதற்குப் பழி வாங்க ஆதித்தன் வீர பாண்டியனைக் கொலை செய்தான்.

6. ராஜராஜன் ஆண்ட காலம் கி பி 976 இல் தொடங்குகிறது; 985 இல் அன்று.

7. அப்போதைய வழக்கத்தில் ராஜா இருக்கும் போது வாரிசு யுவராஜாவாக அங்கீகரிக்கப் பட்டால் அவன் ஆட்சியையும் அப்போதில் இருந்தே ஆரம்பிக்கிறது.

8. இந்தக் கணக்கில் ஆதித்தனும் உத்தம சோழனும் இணையாக ஆட்சி செய்து இருக்கிறார்கள். ஆதித்தன் கொலையுண்ட பின் ராஜராஜன் இளவரசுப் பட்டம் ஏற்று இருக்கிறான். எனவே ராஜராஜன் பட்டம் ஏற்ற இரண்டாம் ஆண்டிலேயே ஆதித்தன் கொலையாளிகள் கண்டு பிடிக்கப் பட்டு தண்டிக்கப் பட்டு இருக்கிறார்கள்.

9. ராஜராஜன் அழித்த காந்தளூர் சாலை உண்மையில் வேத பாட சாலை இல்லை; அது விழிஞம் துறைமுகமாக இருத்தல் கூடும்.

10. கொலையில் சம்பந்தப் பட்ட பிராமணர்கள் கொலையாளிகளுக்கு அறியாமலே உதவி இருக்கக் கூடும். அதனாலேயே அவர்களுக்கு அளிக்கப் பட்ட தண்டனை கடுமையாக இல்லை.

11. பாண்டிய நாடு சதிகாரர்கள் அல்லது சேர நாட்டு சதிகாரர்கள் சம்பந்தப் பட்டு இருக்கலாம்.

இந்த விஷயம் குறித்து தமிழ் நாட்டின் பொது புத்தி ஒன்று உண்டு. திராவிட இயக்கங்கள் தலை எடுத்த பின் நீண்ட நாட்களாய் 'பிராமணர்கள் சுயநலவாதிகள்; கோழைகள்; சதி செய்பவர்கள்; என்ன தவறு செய்தாலும் சட்டம் அவர்களை தண்டிக்காது; தேச துரோகிகள்' என்றெல்லாம் பிம்பம் கட்டமைக்கப் பட்டு கோலோச்சி வருகிறது. தனிப்பட்ட முறையில் பிராமணர்களிடம் உதவி பெற்றவர்களும் பொது என்று வரும்போது இந்தக் குற்றச்சாட்டுகளில் கலந்து கொள்வது வழக்கம். விதி விலக்கானவர்கள் நிறைய உண்டு; அவர்கள் குரல் எப்போதும் எடு படுவதில்லை. வெறும் வாயை மென்று கொண்டிருந்த இவர்களுக்கு உடையான்குடி கல்வெட்டு அவல் போல் ஆகி விட்டது.

இதை முறியடிக்க ஜெயஸ்ரீ வைக்கும் வாதங்கள் குறைவு தான். அவர் கூறுவது எல்லாம் 'மனு நீதி பிரகாரம் பிராமணர்கள் விடுவிக்கப் படவில்லை; பல சமயங்களில் பிராமணர்கள் தண்டிக்கப் பட்டதற்கு ஆதாரங்கள் உள்ளன; தவிரவும் ராஜேந்திர சோழன் நிறைய பிராமணர்களைக் கொன்றதற்கு சான்றுகள் இருக்கின்றன' என்கிறார். சோழ பரம்பரை வாரிசுகளையும், அவர்களின் காலங்களையும், அவர்கள் செய்த போர்களையும் ஆராய விரிவான தளம் அமைத்துக் கொண்ட அவர் கொலையாளிகளை பற்றிய விரிவான அலசலைச் செய்வதற்குக் குறைவான பக்கங்களையே எடுத்துக் கொண்டிருக்கிறார்.

இப்படிப் பார்க்கும் போது வானியலும் ஜோசியமும் தெரிந்த இவர் செய்த ஆராய்ச்சி நுட்பமானது; பாராட்டுக்குரியது. ஆனால் ஆதித்தன் கொலையாளிகளை விரிவாக அலசவில்லை என்று தான் தோன்றுகிறது. கிடைத்த தரவுகளும் குறைவாக இருந்திருக்கலாம். இதற்கான முயற்சியில் இவர் இன்னும் தீவிரமாக ஈடு படுவார் என்றும் இன்னும் விரிவாக வேறொரு புத்தகம் எழுதுவார் என்றும் எதிர் பார்க்கலாம்.

அன்புடன்
அஸ்வத்

***
எனது பதில்:

எனது புத்தகத்தை ஆய்வு செய்தமைக்கு மிக்க நன்றி.

9-ஆவது பாயின்ட் நீங்கள் எழுதியது போலல்ல. காந்தளூர் சாலை ஒரு வேதபாட சாலை என்றுதான் சொல்லியுள்ளேன். பார்த்திவசேகரபுர செப்பேடுகள் மூலம் காந்தளூர்சாலை வேதபாட சாலை என்பது தெரிய வருகிறது என்று சொல்லியுள்ளேன். சதிகாரர்களுக்கு அது புகலிடம் கொடுக்கவே, அங்கு மறைந்திருந்த மலை ஆளர்களை ராஜராஜன் கொன்றிருக்கிறான். விழிஞம் துறைமுகத்துக்கு, காந்தளூர்சாலை என்ற ஊர் பெயர் இருந்திருக்க வேண்டும் என்று எழுதி இருப்பேன்.

நீங்கள் சொன்னது போல கொலயாளிகள் குறித்து அதிகம் தரவுகள் இல்லை. இது வரை கிடைத்துள்ள தரவுகள் அடிப்படையிலும், அந்தப் பார்ப்பனர்களுக்குக் கொலை செய்ய motive இல்லை என்பதாலும், கொடுக்கப்பட்ட தணடனையைப் பொறுத்தும் எழுதியுள்ளேன்.

இந்த நூலின் முக்கியத்துவம், வருடக் கணக்கீட்டை நாம் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்பதும், அப்படி ஒரு மறு ஆய்வை நான் செய்தும் உள்ளேன் என்பதே. உதாரணமாக, தஞ்சைப் பெரிய கோயிலின் காலம் தவறானது என்றும், அது எத்தனை ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என்றும் காட்டியிருப்பேன்.

*** புத்தகத்தைப் பெற இங்கே க்ளிக் செய்யவும்: சுவாசம்