அறிவு என்பது இரண்டு வகைப்பட்டது. சாஸ்த்திரங்களிலிருந்து பெறுவது ஒரு வகை. அவ்வாறு பெற்றதை உள்வாங்கி ஆராய்ந்து புரிந்து கொள்வது இன்னொரு வகை. இவ்வாறு புரிந்து கொண்ட அறிவின் மூலம்தான் சூரியன் இருளை நீக்குவதைப் போல அறியாமையை நீக்கிக் கொள்ள முடியும் என்று விஷ்ணு புராணம் (6-5) கூறுகிறது.
This blog aims at bringing out the past glory and history of India, Hinduism and its forgotten values and wisdom. This is not copyrighted so as to reach genuine seekers of these information. Its my prayer that only genuine seekers - and not vandals & plagiarists - come to this site.
Friday, September 13, 2024
இராமர் வாழ்ந்த யுகம் எது என்று தெரியுமா?
Wednesday, September 11, 2024
தசரதருக்கு வயது 60,000 ஆண்டுகளாமே?
இராமர் ஆண்ட காலம் 11,000 வருடங்கள் என்பது 11,000 தினங்களுக்கு சமம் என்று வேதப் பிரமாணத்துடன் சொன்னோம். உடனே, அந்தக் கணக்கை தசரதரது வயதுக்கும் பயன்படுத்தி, தசரதர் 60,000 ஆண்டுகள் வாழ்ந்தார்; அப்படியென்றால் 60,000 நாட்கள் என்று அர்த்தமா? 60,000 ÷ 360 = 166.6 வருடங்கள் என்றாகுமே என்று கேட்பவர்களுக்கு உண்டு. அவர்களுக்கும், 60,000 வருடங்கள் வாழ முடியும், அதை நம்ப வேண்டும் என்று சொல்லும் கிரிப்டோ வேடதாரிக்கும் இந்தப் பதிவு.
Sunday, September 8, 2024
இராமர் 11,000 வருடங்கள் ஆண்டாரா?
இராமர் பதினோராயிரம் ஆண்டுகள் ஆண்டார் என்ற விவரம் மூன்று இடங்களில் வால்மீகி இராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளது. அப்படிப் பதினோராயிரம் ஆண்டுகள் இராமர் வாழ்ந்தது சாத்தியமே என்று நம்புபவர்கள் இருக்கிறார்கள். அப்படிச் சொல்வதில் சில கேள்விகள் வருகின்றன.
அவர் வாழ்ந்த காலம் வரையிலும், அவரது தம்பிமார்களான லக்ஷ்மணன், பரதன், சத்ருக்னன் ஆகியோரும் வாழ்ந்தார்களே, அவர்களும் 11,000 ஆண்டுகள் வாழ்ந்தார்களா. அவர்களுடன் அவர்கள் மனைவிமார்களும் இராமருடன் சரயு நதியில் இறங்கி வைகுந்தம் போனார்களே அவர்களும் 11,000 வருடங்கள் வாழ்ந்தார்களா?
Saturday, September 7, 2024
இராமாயணத்துக்கும், மஹாபாரதத்துக்கும் இடையே உள்ள கால இடைவெளி
மகாபாரதத்தைக் கற்பனை என்று நம்ப வைப்பது கடினம். ஏனெனில் கிருஷ்ணர் தனது மனித சரீரத்தை விட்ட வருடத்திற்கு 35 வருடங்களுக்கு முன் மஹாபாரத யுத்தம் நடந்தது என்பதற்கு மகாபாரதத்தில் ஆதாரங்கள் இருக்கவே, மஹாபாரத யுத்தம் நடந்தது பொ. மு. 3136 என்பதை எளிதில் ஒதுக்கிவிட முடியாது.
இராமாயணம் 7000 ஆண்டுகளுக்கு முன் நடந்த உண்மைச் சரித்திரம்
பிராமணனாகப் பிறந்து கிருஸ்துவப் பெண்ணை மணந்து கொண்டு, அதை மறைத்து, பிராம்மணனாகவே தன்னைக் காட்டிக் கொண்டு, பிராம்மணர்களையும், ஹிந்து மதத்தவர்களையும் தாக்கும் கிரிப்டோக்களும் இருக்கிறார்களே, அவர்கள் பரப்பும் பொய்யையும், அவதூறுகளையும் காட்ட உண்மைக் கருத்துக்களை சிறு கட்டுரைகளாக எழுதுகிறேன்
Part 2 of my talk on Lanka (Q-A session)
In the 2nd part of my talk on Lanka, I am replying to questions such as
# Types of Yuga and Rama's birth in Treta yuga # Reference to two Agastya-s in Sugreeva's version # Presence of Agastya in two Tamil sangam-s # How to justify 100 yojana length of Ram setu # The mention of 1000s of years in different contexts in Valmiki Ramayana # Origin of Tamil-Sanskrit.Monday, August 26, 2024
My talk about Bhagawan Krishna, Nappinnai and Raasa Leela
My talk in Tamil on various details about Bhagawan Krishna and Krishna Jayanti.
# Why is Krishna Jayanti celebrated on two different dates?
# Krishna can be regarded as the son-in-law of the
Tamil people by having married Nappinnai.
# Details about the identity of Nappinnai and her
original name.
# Descendants of Krishna in Tamil Nadu.
# Raasa Leela of Krishna – did Krishna misbehave with
women?
# Raasa Leela described in Aga Nanuru.
# Purport of Raasa Leela.
Monday, August 19, 2024
My talk on "Ravana's Lanka"
My talk on Ravana's Lanka.
# critiquing the versions of Jijith Ravi, Nilesh Oak & others# Ravana's Lanka identified from literary & epigraphic sources
# identifying Lanka from Mahavamsa
# identifying the location of Pandya's Kavaatam from the description of Valmiki Ramayana that Lanka was on the other side of the ocean from Kavaatam
# exploring the once-existed landmass between India and Sri Lanka through a 2000 year old map
# the different routes to Lanka taken by Ravana, Hanuman and Rama.
Review of "ராமானுஜ இதிகாசம்" in Dinamani
இராமானுஜாசரியார் வாழ்க்கை நிகழ்ச்சிகளை உண்மை என்று நிரூபிக்கும் நூல்.
அவர் சோழ அரசன் கொடுத்த தொந்திரவால் நாட்டை விட்டு வெளியேறியது உண்மை என்பதையும், அந்த அரசன் யார் என்பதையும், கல்வெட்டு முதலான ஆதராங்கள் மூலம் இந்த நூல் நிரூபிக்கிறது.
அவ்வாறு வெளியேறிய அவர் எத்தனை காலம் நாட்டுக்கு வெளியே இருந்தார் என்பதையும், அந்த காலக் கட்டத்தில் மைசூர் அருகே மேல்கோட்டை என்னுமிடத்தில், முகலாயர் படையெடுப்பால் அழிந்த கோயிலைப் புதுப்பித்ததையும், தில்லிக்குச் சென்று, முகலாயர் வசம் இருந்த மேல்கோட்டை உத்சவ மூர்த்தியைத் திரும்பப் பெற்றார் என்பவை முதலான பல சரித்திர விவரங்களையும், ஆதாரங்களுடன் விளக்குகிறது இந்த நூல்.
மேலும், சிதம்பரத்தில், கோவிந்தராஜப் பெருமானை கடலில் தூக்கி எறிந்த சோழ அரசன் யார் என்பதையும், அங்கிருந்த உத்சவ மூர்த்தியைக் காப்பாற்றி திருப்பதில் இராமானுஜர் பிரதிஷ்டை செய்த வரலாற்றையும் சான்றுகளுடன் இந்த நூல் நிரூபிக்கிறது.
பின்னூட்டங்களாகக் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் ஜாதிச் சண்டைகள் உண்டான வரலாற்றையும், திப்பு சுல்தானால், மண்டையம் ஐயங்கார்கள் கொல்லப்பட்ட விவரத்தையும் தருகின்றன.
Review of " ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்?" in Dinakaran and Dinamani
கல்வெட்டுகள் அடிப்படையில் ஆதித்த கரிகாலன் வாழ்க்கைப் பின்னணியையும், அவன் மறைவின் காரணத்தையும் விளக்கும் நூல். அருள்மொழி வர்மன் எனப்படும் இராஜராஜ சோழன் காந்தளூர் சாலை கலமறுத்தது எவ்வாறு என்பதையும் விளக்குகிறது.




















